Monday, January 24, 2011

பாமரன் புலம்பல்


வெங்காயம் உரித்தால்
மட்டும்
கண்ணீர்
வரவில்லை
....
விலையை
கேட்டாலும்
கண்ணீர்
வருகிறது....


Thursday, December 30, 2010

மனிதப்பிறவி


மனிதப்பிறவி
பிறப்பும் இறப்பும்...
இதனிடையில் வாழும்
காலத்தில் நம்மிடையே...

தீண்டாமை பகைமை
பழிஉணர்ச்சி...
படிப்பு வேலை...
நட்பு காதல் திருமணம்...
பாசம் வேஷம்
போட்டி பொறாமை...
உணர்ச்சிகள் மிகுந்ததொரு
நம் மனித வாழ்க்கை...

சுதந்திர நாட்டில்
காதலிக்க இன்னும்
சுதந்திரமில்லை
ஜாதி மத
வேறுபாடுகளால்...

வரதட்சணை கொடுமை...
லஞ்சம் ஊழல்
தலை விரித்தாடுகின்றன
சுதந்திர நாட்டில்...

மீண்டும் ஒரு
பாரதியும் பெரியாரும்
காந்தியும்
பிறந்திட வேண்டும்
நம் சுதந்திர நாட்டின்
சுதந்திரம் காத்திடவும்
மனித வாழ்க்கையை
சீர்திருத்தவும்....


Wednesday, December 29, 2010

புத்தாண்டு


வீதியின் ஓரத்தில்
ஒருகழித்து
கிடக்கிறாள்
வயோதிக
மூதாட்டி
உண்ண
உணவில்லாமல்
வசிக்க
வீடில்லாமல்...
பணத்தை
இறைத்து
புத்தாண்டு
விழாகொண்டாடி
வீதியங்கும்
வாழ்த்துக்கூறி
வாகனங்களில்
பறக்கிறார்கள்
இரக்கமற்ற பலர்....



Tuesday, December 28, 2010

ஜென்மம்


அவளை நேசிக்க
ஒரு ஜென்மம்...
அவளோடு வாழ்ந்திட
இன்னுமொரு ஜென்மம்...
நொடிப்பொழுதும்
அவளை பிரியாத
அந்த இரு ஜென்மம்...
இந்த வரம் மூன்று
கொடு இறைவனே...


முதியோர் இல்லம்


பத்து மாதம்
தனது கருப்பையில்
சுமந்து பெற்றடுத்த
தாயின் முதிர்வு காலத்தில்...
பல லட்சத்தில் மகன்
கட்டிய வீட்டில்
வசிக்க ஒரு இடமில்லை...


பாசம்


என்னை பெற்றவளும்
கட்டியவளும்
நான் பெற்றடுதவளும்
என்னை கடிந்து கொண்டனர்...
என் ஒருவனால் அவர்களிடம்
பாசத்தை பகிர்ந்து
கொள்ள முடியவில்லையென்று...
இறைவன் கொடுத்த வரம்
மூவரும் எனக்காக...


Thursday, December 23, 2010

மீண்டும் அந்த நாட்கள்


மீண்டும் அந்த
நாட்கள் வாராதா....
அம்மாவின் கரம் பிடித்து
பள்ளிக்கு சென்ற நாட்கள்....
தந்தையோடு சென்று
பண்டிகைக்கு புது துணி
எடுத்த நாட்கள்....
தங்கையோடு தீபாவளி
பட்டாசு வெடித்த நாட்கள்....
பள்ளி நண்பர்களோடு
கபடி விளையாடிய நாட்கள்....
கல்லூரி நண்பர்களோடு
திரைப்படம் பார்த்த நாட்கள்....
இவையாவும் மீண்டும் வர
நான் சிறுவனாய் மாறிவிட
வரம் ஒன்று கொடு இறைவனே....


வலி

மகளை ஈன்றெடுத்த
வலியை விட....
திருமணத்திற்குபின் பிரியும்
வலியை விட....
பள்ளி சென்ற மகளின்
பத்திரமான வருகைக்காக
காத்திருக்கும் வலி அதிகம்....


வருங்காலம்

அன்று என் தந்தை
கவலைப்பட
என் வருங்காலம் பற்றிய
கவலையின்றி திரிந்தேன்....
இன்று நான் தந்தையாய்
என் வருங்காலக்
கவலையோடும்
கனவுகளோடும்
அலைகிறேன்....


Saturday, December 18, 2010

சுவை


சுவையாய் உண்ணும் எனக்கு
உப்பில்லாத உணவும்
மிகவும் சுவைத்தது
இன்று...
ஊட்டியவள்
என் மகள் என்பதால்....


Wednesday, July 28, 2010

காணவில்லை


எங்கு தேடியும்
கிடைக்கவில்லை...
யாரிடம் கேட்டும்
பிரயோஜனமில்லை...
நேற்று சந்தித்த அவள்
மீது சந்தேகமுண்டு...
களவாண்டு விட்டாள்
என் இதயத்தை என்று...
எங்கு புகார் செய்வேன்
இந்த காதல் திருட்டை...
தருவாளா பதிலாக
அவள் இதயத்தை என்று....


மழை


பூமித் தாயின்
உஷ்ணத்தை குளிர்விக்க
மேக மகளின்
அழுகை
மழை....


இயற்க்கை


கரு நீல வானில்
மின்னும்
நட்ஷத்ரிகங்களிடையே
அழகு வெள்ளை நிலா...
மறைந்த நிலவின்
சூரிய ஒளியில்
அழகு வெள்ளை வானம்...
இயற்கையின் விசித்திரங்கள்
இன்னும் பல....


மனிதனும் விலங்கும்


ஆறறிவு படைத்த
மனிதனிடம்
ஜாதி மதங்கள் உண்டு
பொறாமை மொழிவெறிகள் உண்டு...
ஐந்து அறிவு
படைத்த விலங்கிடம்
பாகுபாடுகள் இல்லை...
மனிதனும்
ஐந்து அறிவு கொண்ட
மனித விலங்காகவே
படைக்கபட்டிருக்கலாம்....


Monday, July 19, 2010

மாறாத உண்மை


கனவுகள்
நாளைய நிஜங்கள்....
பொய்கள்
நாளைய உண்மைகள்....
விதைகள்
நாளைய மரங்கள்....
காதலர்கள்
நாளைய தம்பதிகள்....
நண்பர்கள்
நாளையும் நண்பர்கள்....


என் உயில் சாசனம்


நான் இறந்தப்பின்
என் கண்களை
உன்னோடு வைத்துக்கொள்
உன்னை நான்
எப்பொழுதும்
பார்க்கவேண்டும் என்பதால்....
என் இதயத்தை
மட்டும் எரித்து
விடாதே அதில்
நீ இருப்பதால்....


தானம்


இறந்தால் மட்டும்
தான் உறுப்பு
தானமா....
நான் இப்பொழுதே
தானம்
செய்துவிட்டேன்
உன்னிடம்
என் இதயத்தை....


இதயம்


என் இதயம்
ஒரு கண்ணாடி
அதில் உன் உருவம்
பிரதிபலிப்பதால்....
அதை உடைப்பதும்
பாதுகாப்பதும்
உன்னிடமே உள்ளது....


உன் மௌனம்


மௌனம்
சம்மதம்
என்றார்கள்....
இல்லை....
உன் மௌனம்
என் நரகம்....


நண்பர்கள்


உருவங்கள் மாறலாம்...
ஆசைகள் மாறலாம்...
ஆனால் நம்
இலட்சியங்களும்
சிந்தனைகளும்
ஒன்றுதான்...
நம் நண்பர்கள்
என்பதால்...


தீபாவளி


வீதியெங்கும்
வீட்டு வாசலெங்கும்
காகித குப்பை....
பிள்ளையின் அழுகைக்கு
மீண்டும் பட்டாசு
வாங்கினான் ஆயிரம்
ரூபாயை கரியாக்க....
வழிமறித்த
ஏழை சிறுவனின்
பசிக்கு பணமில்லை என்றான்....


Tuesday, June 29, 2010

துக்கம்


இவனின்
சந்தோஷம்

இவன்
குடும்பத்தின்
சோகம்
....
புகை
பிடித்து
மது
குடித்து
மடிபவன்
....


காத்திருந்தேன்


காத்திருந்தேன்
விடிந்த
பின்பும்
வரவில்லை

என்
கனவில் நீ....
மீண்டும்

காத்திருப்பேன்

என்
கனவு
தேவதை
உனக்காக....


Monday, June 28, 2010

பரிசு

கவிதை போட்டியிலும்
ஓவிய போட்டியிலும்
முதல் பரிசு
தந்தார்கள்....
என் கவிதையும்
ஓவியமும்
உன் பெயர் தான்....


மனிதப்பிறவி

ஜனனம் மரணம்
இறைவன் கொடுப்பது....
இதனிடையில் இருக்கும்
வாழ்க்கை மனிதன்
நிர்ணயிப்பது....
இதில் சந்தோஷம்
நிம்மதியும் போதும்....
விரோதம் பொறாமையும்
வேண்டாம்....


Friday, June 25, 2010

அம்மா


அம்மா என்ற
சொல்லின்

அற்புதம்

புரிந்தது

என்
மகள்
என்னை

அம்மா
என்று
அழைத்தபோது
....


Friday, June 18, 2010

காந்தி தேசம்


எங்கள்
தேச
பிதாவை
என்றும்
மறந்ததில்லை
நாங்கள்
...
அவர்
படம்
பதித்த
ருபாய்
நோட்டை
வாங்காமல்
எந்த
பணியும்
முடிக்க
மாட்டோம்
நாங்கள்....


Saturday, June 12, 2010

வரம்


வரமொன்று
கேட்டேன்

இறைவனிடம்
...
கொடுத்தான்

என்
மகளாக....


மரம்


வீட்டிற்க்கு ஒரு
மரம்
வளர்க்காவிட்டாலும்
வீதிக்கு ஒரு
மரமாவது
விட்டுவைப்போம்....


அறிகுறிகள்

நினைப்பதும்...
நகைப்பதும்...
அடிகடி முகம்
பார்ப்பதும்...
தனிமையில் உரையாடி
கொள்வதும்...
இவை காதலுக்கும்
பித்துக்கும்
அறிகுறிகலாம்
....