skip to main |
skip to sidebar
இவனின்
சந்தோஷம்
இவன் குடும்பத்தின்
சோகம்....
புகை பிடித்து
மது குடித்து
மடிபவன்....
காத்திருந்தேன்
விடிந்த பின்பும்
வரவில்லை
என் கனவில் நீ....
மீண்டும்
காத்திருப்பேன்
என் கனவு
தேவதை உனக்காக....
கவிதை போட்டியிலும்
ஓவிய போட்டியிலும்
முதல் பரிசு
தந்தார்கள்....
என் கவிதையும்
ஓவியமும்
உன் பெயர் தான்....
ஜனனம் மரணம்
இறைவன் கொடுப்பது....
இதனிடையில் இருக்கும்
வாழ்க்கை மனிதன்
நிர்ணயிப்பது....
இதில் சந்தோஷம்
நிம்மதியும் போதும்....
விரோதம் பொறாமையும்
வேண்டாம்....
அம்மா என்ற
சொல்லின்
அற்புதம்
புரிந்தது
என் மகள்
என்னை
அம்மா என்று
அழைத்தபோது....
எங்கள்
தேச பிதாவை
என்றும் மறந்ததில்லை
நாங்கள்...
அவர் படம்
பதித்த ருபாய்
நோட்டை வாங்காமல்
எந்த பணியும்
முடிக்க மாட்டோம்
நாங்கள்....
வரமொன்று
கேட்டேன்
இறைவனிடம்...
கொடுத்தான்
என் மகளாக....
வீட்டிற்க்கு ஒரு
மரம்
வளர்க்காவிட்டாலும்
வீதிக்கு ஒரு
மரமாவது
விட்டுவைப்போம்....
நினைப்பதும்...
நகைப்பதும்...
அடிகடி முகம்
பார்ப்பதும்...
தனிமையில் உரையாடி
கொள்வதும்...
இவை காதலுக்கும்
பித்துக்கும்
அறிகுறிகலாம்....
தேர்வு வினாத்தாளில்
கேள்விகள் நூறு
இருந்தும் எனக்கு
விடை ஒன்றுதான்
"தெரியவில்லை"....
செய்திதாள்கள் அனைத்தும்
கையில் இருந்தும்
படிக்க நேரமில்லை...
விடிவதற்க்குள்
அனைத்து வீட்டிலும்
விநியோகம் செய்துவிட்டு
கல்லூரிக்கு செல்ல
வேண்டும் என்பதால்....
என் சிறுவயது
மழலை பேச்சுக்கள்
குறும்புகள்
சண்டைகள்
அழுகைகள்
பிடிவாதங்கள்
நேரில் பார்க்கும் உணர்வு....
என் பிரதிபலிப்பில்
என் மகள்....