Thursday, October 22, 2009

மரணம்

நீ இல்லாத இவ்வுலகில்
இறைவனிடம்
நான் கேட்கும் வரம்....


மழை

மழை நனைந்து
வீடு வர ஆசை உண்டு
நீயும் பதறிபோய்
உன் புடவை முந்தனையால்
என் தலை துவட்டி
விடுவதால்....


வரம்

கடவுள் தோன்றினால்
உனக்கு முன் நான்
இறந்து போகும் வரம் கேட்பேன்
உன் பிரிவு என்னால்
தாங்க இயலாதென்பதால்....
மறு ஜென்மத்திலும்
உனக்கு முன் நான்
பிறக்க வரம் கேட்பேன்
உன்னையே கரம்பிடிக்க
வேண்டுமென்பதால்....