Saturday, October 15, 2011

வரமொன்று உன்னிடம்

இரவுக்கு நிலவு
பகலுக்கு சூரியன்
என்றிருப்பதை போல...
உனக்கு நான்
எனக்கு நீ
என்றிருக்க வரமொன்று தருவாயா...

Tuesday, September 27, 2011

அன்னையர் தினம்

அவளின்றி நான் இல்லை
இவ்வுலகில்
...
அவள்
தந்த வாழ்வே
வாழ்கிறேன்
இம்மண்ணில்...
எனக்காக
தன் வாழ்வை
அற்பணித்தவள்
...
எல்லா
வலிகளையும் எனக்காக
சுகமான
சுமையாக்கியவள்...
அவளே
என்னை பெற்றடுத்த அன்னை...

அன்னையராய்
பிறப்பதே பெருமை...
அவளின்
முதுமை காலத்தில்
அவளை
பாதுகாப்பது
நமக்கு
அதை விட பெருமை...
அன்னையரை
போற்றுவோம்...
அன்னையர்
தின வாழ்த்துக்கள் மூலம்...

Monday, May 9, 2011

ஆயுள்

என்னோடு நீ இருக்கும்
ஒவ்வொரு நொடிப்பொழுதும்
என் ஆயுள் காலத்தை
அதிகரிக்கும்
தருணங்கள்....


Friday, April 8, 2011

உலகக் கோப்பை


இருபத்தியெட்டு ஆண்டு
கனவு
...
நூற்றி
இருபத்தி ஓரு கோடி
மக்களின்
விருப்பம்...
கைகோர்த்து
நின்றார்கள்
லட்சிய
வெறியோடும்
ஜெயிக்கும்
உணர்வோடும்
பதினோரு
சிங்கங்கள்...
வென்று
தந்தார்கள்
தாய்
நாட்டிற்கும்
இந்திய
மக்களுக்கும்
மட்டை
பந்து
உலக
கோப்பையை...
இந்தியா
தலை நிமிர்கிறது
இவர்களால்
....

(
இந்திய மட்டை பந்து வீரர்களுக்கு
இந்த
கவிதை சமர்ப்பணம்...)


ஹைக்கூ கவிதைகள்


ஒருவரின்
அன்பையும்
சந்தோஷத்தையும்
துக்கத்தையும்
மற்றொருவருடன்
பகிர்ந்து கொள்ள
காத்திருக்கிறேன்...
தபால்பெட்டி....
********************************

தினமும் காலையில்
என்னை காண
அனைவருக்கும் ஆவல்...
மாதக்கடைசியில்
வேண்டாப்பொருளாய்
பழைய பாத்திரக்
கடையில் நான்...
தினசரி நாளிதழ்....
**********************************


Monday, March 21, 2011

கவிதை


எழுத நினைத்த
கவிதைக்கு
வரிகள்
கிடைக்கவில்லை
...
கண்மூடி
அமர்ந்த
என்னுள்
கவிதையாய்
நீ....


காதல்


முகம் பார்த்து
மனம்
பார்த்து
புகைப்படம்
பார்த்து
குரல்
கேட்டு
வருவது
காதல் ...
உன்
நிழல் மட்டுமே
பார்த்து
வந்தது
என்
காதல்....


திருவிழா


திருவிழா வந்ததோர்
உணர்வு

தேர்தல்
வந்ததும்
தனது
ஓட்டுக்கு
கிடைக்கும்
பணத்திற்காக
இவன்
குடிமகன்....


Monday, March 14, 2011

ஜப்பான் மக்கள்...


பூகம்பத்தால் நாங்கள்
அழிந்து
விடவுமில்லை...
சுனாமியால்
நாங்கள்
கரைந்து
விடவுமில்லை...
வெகுண்டு
எழுவோம்
நாங்கள்
மீண்டும்
எங்கள்
தேசத்திற்காக...


குழந்தை


நீ கருவாய் உருவான
நாள்
முதல்
உன்
முகம் காண
ஏக்கத்தோடு
காத்திருந்தேன்...
தேவதையாய்
பிறந்த நீ
இன்று
என் மடியில்
என்னை
கண்ட
புன்சிரிப்போடு
....


Thursday, March 10, 2011

காதல்

கடிதம் கொடுத்து
காதலை சொல்ல
காத்திருந்தேன் உன்னிடம்...
பத்திரிகை கொடுத்து
திருமணத்திற்கு
அழைத்தாய் என்னிடம்...
காதலை சொல்ல
நினைத்தேன் நான்...
நட்பென்று புரிய
வைத்தாய் நீ...


Monday, January 24, 2011

பாமரன் புலம்பல்


வெங்காயம் உரித்தால்
மட்டும்
கண்ணீர்
வரவில்லை
....
விலையை
கேட்டாலும்
கண்ணீர்
வருகிறது....