Wednesday, July 8, 2015

நண்பா நம் நட்பின் வயது 36 !!!



 
நண்பா நம் நட்பின் வயது 36!!!

தொலைக்காட்சி இல்லா
காலம் முதல்
கைபேசியில் படம் பார்க்கும்
காலம் வரை...

கருப்பு வெள்ளை
புகைபடக்காலம் முதல்
செல்பி காலம் வரை....
நம் நட்பு தொடர்கிறது...

இனி நிலவுக்கும் மார்சுக்கும்
நாம் சுற்றுலா செல்லும்
காலம் வரை
நம் நட்பு தொடரும் நண்பா.....!!

நண்பன் அர்விந்த்க்கு  சமர்ப்பணம்..
..




என் சிறு வயது
சேட்டைகள்
பிடிவாதங்கள்
குறும்புகள்
கெஞ்சல்கள்
கொஞ்சல்கள்
பிரதிபலிக்கும்
நிஜங்களாய்
என் குழந்தைகள்....

தனிமை




உன்னோடு நான் இருக்கும்
தருணங்கள் எனக்கு இனிமை...
நீ என்னோடு இல்லாத தருணங்கள்
எனக்கு வெறுமை...

உன்னோடு பேசிக்கொண்டிருந்தால்
என்றும் புதுமை...
நீ இல்லாமல் பேசிக்கொண்டிருந்தால்
என்றும் தனிமை...
என்னோடு நீ இருந்தால்
தொலை தூரமும்
பக்கமாய் உணர்கிறேன்...
நீ என்னோடு
இல்லாதிருந்தால் பக்கமும்
தொலை தூரமாய் அறிகிறேன்...
நீ என்னோடு இருக்கும்பொழுது
நம் குடும்பத்தை ஒன்றாக
இணைக்கிறாய்...
என்னோடு நீ இல்லாதபொழுது
நம் குடும்பத்தை
என்னை விட்டு பிரிக்கிறாய்...
இப்படிக்கு கைபேசி பற்றி நான்....

ஆசை




அம்மாவின் பாசம்...
மனைவியின் காதல்...
மகளின் அன்பு...
நண்பனின் நட்பு...
உடன்பிறந்தவர்களின் நேசம்...
இவற்றுக்காக இன்னும்
நூறு வருடங்கள்
ஏழு ஜென்மமும்
வாழ்ந்திட ஆசை...

சூரியன் சந்திரன்




சூரியன் தினமும்
உதிக்கின்றான் 
குழந்தையின் மழலை
சிரிப்பை காண்பதற்காக....
சந்திரன் தினமும் இரவில் மிளிர்கின்றான்
நிலா சோறுட்டி
உறங்க வைக்கும்
அன்னைக்காக....

Saturday, May 5, 2012

மனிதன்

ஒழிப்போம்
குழந்தை தொழிலையும்
முதியோர் இல்லத்தையும்...
அரவணைப்போம்
அனாதை குழந்தைகளையும்
நம் பெற்றோர்களையும்...
கொடுப்போம்
அனைவர்க்கும் கல்வியும்
இல்லாதோருக்கு நம்மால் இயன்ற
உதவிகளையும்...
மகானாக வேண்டாம்...
மனிதனாய் வாழ்ந்தால் போதும்...

காதல் புலம்பல்

நரகத்தை காண்கிறேன்
நீ என்னோடு
இல்லாத தருணங்களில்...
சொர்கத்தை காண்கிறேன்
நீ என்னோடு
இருக்கும் தருணங்களில்...

***********************************


நூறாண்டு நீ இல்லாமல்

வாழ்வதை விட
அரை நிமிடம்
உன்னோடு வாழ்ந்து
மடிவது மேல்...


அம்மா

உச்சரித்த முதல்
வார்த்தை அம்மா...
பசித்தால் கூறும்
வார்த்தை அம்மா...
வலித்தால் கதறும்
வார்த்தை அம்மா...

எல்லாம் அவளாக
இருப்பின் எப்படி
மறக்கிறார்கள்
திருமணம் ஆனதும்
அம்மாவை...

கவிதை

ஒரு வார்த்தையில்
புரிந்தது கவிதை...
குழந்தை மழலை
பாஷையில் அம்மா என்று
அழைத்தபொழுது...

தாத்தா

எங்களின் ஒவ்வொருவர் வருகைக்கும்
நீங்கள் காத்திருப்பீர்கள்
சாய்வு நாற்காலியில்
உட்கார்ந்து கொண்டு...

இந்த வருகைக்கும்
காத்திருந்தீர்கள்
புகைபடமாய்...

உங்கள் உருவம் இருந்தது
ஒலி மட்டும் இல்லை...

இனி உங்கள் உருவம்
மட்டும் காத்திருக்கும்
புகைபடமாய்
எங்களின்
வருகைக்காக என்றும்...

பிரியத்தோடு அழைக்க...

நம் வயது முதிர்கையில்
நமக்கு பிரியமான
முதியவர்களை
அழைக்கும் வாய்ப்பை இழக்கிறோம்...
இதற்காக வேணும் நான்
குழந்தையாய் இருந்து விட
விரும்புகிறேன்...
இன்று நான் அழைக்க
யாருமில்லை
தாத்தா என்றும் பாட்டி என்றும்....

சொர்க்கம்

அம்மாவின் அன்பு
அப்பாவின் அரவணைப்பு
நண்பனின் நட்பு
குழந்தையின் சிரிப்பு
மனைவியின் காதல்
இவை நாம் வாழும்போது
பூமியில் கிடைக்கின்ற
சொர்க்கம்...

ஆயுள்

நீ என்னோடு
பேசிக்கொண்டோ திட்டிக்கொண்டோ
தொட்டுக்கொண்டோ கொஞ்சிக்கொண்டோ
எவ்வாறாக இருந்தாலும்
என்னோடு தொடர்பில் இருக்கும்
ஒவ்வொரு நொடியும்
என் ஆயுள் கூடுகிறது...

Saturday, October 15, 2011

வரமொன்று உன்னிடம்

இரவுக்கு நிலவு
பகலுக்கு சூரியன்
என்றிருப்பதை போல...
உனக்கு நான்
எனக்கு நீ
என்றிருக்க வரமொன்று தருவாயா...

Tuesday, September 27, 2011

அன்னையர் தினம்

அவளின்றி நான் இல்லை
இவ்வுலகில்
...
அவள்
தந்த வாழ்வே
வாழ்கிறேன்
இம்மண்ணில்...
எனக்காக
தன் வாழ்வை
அற்பணித்தவள்
...
எல்லா
வலிகளையும் எனக்காக
சுகமான
சுமையாக்கியவள்...
அவளே
என்னை பெற்றடுத்த அன்னை...

அன்னையராய்
பிறப்பதே பெருமை...
அவளின்
முதுமை காலத்தில்
அவளை
பாதுகாப்பது
நமக்கு
அதை விட பெருமை...
அன்னையரை
போற்றுவோம்...
அன்னையர்
தின வாழ்த்துக்கள் மூலம்...

Monday, May 9, 2011

ஆயுள்

என்னோடு நீ இருக்கும்
ஒவ்வொரு நொடிப்பொழுதும்
என் ஆயுள் காலத்தை
அதிகரிக்கும்
தருணங்கள்....


Friday, April 8, 2011

உலகக் கோப்பை


இருபத்தியெட்டு ஆண்டு
கனவு
...
நூற்றி
இருபத்தி ஓரு கோடி
மக்களின்
விருப்பம்...
கைகோர்த்து
நின்றார்கள்
லட்சிய
வெறியோடும்
ஜெயிக்கும்
உணர்வோடும்
பதினோரு
சிங்கங்கள்...
வென்று
தந்தார்கள்
தாய்
நாட்டிற்கும்
இந்திய
மக்களுக்கும்
மட்டை
பந்து
உலக
கோப்பையை...
இந்தியா
தலை நிமிர்கிறது
இவர்களால்
....

(
இந்திய மட்டை பந்து வீரர்களுக்கு
இந்த
கவிதை சமர்ப்பணம்...)


ஹைக்கூ கவிதைகள்


ஒருவரின்
அன்பையும்
சந்தோஷத்தையும்
துக்கத்தையும்
மற்றொருவருடன்
பகிர்ந்து கொள்ள
காத்திருக்கிறேன்...
தபால்பெட்டி....
********************************

தினமும் காலையில்
என்னை காண
அனைவருக்கும் ஆவல்...
மாதக்கடைசியில்
வேண்டாப்பொருளாய்
பழைய பாத்திரக்
கடையில் நான்...
தினசரி நாளிதழ்....
**********************************


Monday, March 21, 2011

கவிதை


எழுத நினைத்த
கவிதைக்கு
வரிகள்
கிடைக்கவில்லை
...
கண்மூடி
அமர்ந்த
என்னுள்
கவிதையாய்
நீ....


காதல்


முகம் பார்த்து
மனம்
பார்த்து
புகைப்படம்
பார்த்து
குரல்
கேட்டு
வருவது
காதல் ...
உன்
நிழல் மட்டுமே
பார்த்து
வந்தது
என்
காதல்....


திருவிழா


திருவிழா வந்ததோர்
உணர்வு

தேர்தல்
வந்ததும்
தனது
ஓட்டுக்கு
கிடைக்கும்
பணத்திற்காக
இவன்
குடிமகன்....


Monday, March 14, 2011

ஜப்பான் மக்கள்...


பூகம்பத்தால் நாங்கள்
அழிந்து
விடவுமில்லை...
சுனாமியால்
நாங்கள்
கரைந்து
விடவுமில்லை...
வெகுண்டு
எழுவோம்
நாங்கள்
மீண்டும்
எங்கள்
தேசத்திற்காக...


குழந்தை


நீ கருவாய் உருவான
நாள்
முதல்
உன்
முகம் காண
ஏக்கத்தோடு
காத்திருந்தேன்...
தேவதையாய்
பிறந்த நீ
இன்று
என் மடியில்
என்னை
கண்ட
புன்சிரிப்போடு
....


Thursday, March 10, 2011

காதல்

கடிதம் கொடுத்து
காதலை சொல்ல
காத்திருந்தேன் உன்னிடம்...
பத்திரிகை கொடுத்து
திருமணத்திற்கு
அழைத்தாய் என்னிடம்...
காதலை சொல்ல
நினைத்தேன் நான்...
நட்பென்று புரிய
வைத்தாய் நீ...


Monday, January 24, 2011

பாமரன் புலம்பல்


வெங்காயம் உரித்தால்
மட்டும்
கண்ணீர்
வரவில்லை
....
விலையை
கேட்டாலும்
கண்ணீர்
வருகிறது....


Thursday, December 30, 2010

மனிதப்பிறவி


மனிதப்பிறவி
பிறப்பும் இறப்பும்...
இதனிடையில் வாழும்
காலத்தில் நம்மிடையே...

தீண்டாமை பகைமை
பழிஉணர்ச்சி...
படிப்பு வேலை...
நட்பு காதல் திருமணம்...
பாசம் வேஷம்
போட்டி பொறாமை...
உணர்ச்சிகள் மிகுந்ததொரு
நம் மனித வாழ்க்கை...

சுதந்திர நாட்டில்
காதலிக்க இன்னும்
சுதந்திரமில்லை
ஜாதி மத
வேறுபாடுகளால்...

வரதட்சணை கொடுமை...
லஞ்சம் ஊழல்
தலை விரித்தாடுகின்றன
சுதந்திர நாட்டில்...

மீண்டும் ஒரு
பாரதியும் பெரியாரும்
காந்தியும்
பிறந்திட வேண்டும்
நம் சுதந்திர நாட்டின்
சுதந்திரம் காத்திடவும்
மனித வாழ்க்கையை
சீர்திருத்தவும்....


Wednesday, December 29, 2010

புத்தாண்டு


வீதியின் ஓரத்தில்
ஒருகழித்து
கிடக்கிறாள்
வயோதிக
மூதாட்டி
உண்ண
உணவில்லாமல்
வசிக்க
வீடில்லாமல்...
பணத்தை
இறைத்து
புத்தாண்டு
விழாகொண்டாடி
வீதியங்கும்
வாழ்த்துக்கூறி
வாகனங்களில்
பறக்கிறார்கள்
இரக்கமற்ற பலர்....



Tuesday, December 28, 2010

ஜென்மம்


அவளை நேசிக்க
ஒரு ஜென்மம்...
அவளோடு வாழ்ந்திட
இன்னுமொரு ஜென்மம்...
நொடிப்பொழுதும்
அவளை பிரியாத
அந்த இரு ஜென்மம்...
இந்த வரம் மூன்று
கொடு இறைவனே...


முதியோர் இல்லம்


பத்து மாதம்
தனது கருப்பையில்
சுமந்து பெற்றடுத்த
தாயின் முதிர்வு காலத்தில்...
பல லட்சத்தில் மகன்
கட்டிய வீட்டில்
வசிக்க ஒரு இடமில்லை...


பாசம்


என்னை பெற்றவளும்
கட்டியவளும்
நான் பெற்றடுதவளும்
என்னை கடிந்து கொண்டனர்...
என் ஒருவனால் அவர்களிடம்
பாசத்தை பகிர்ந்து
கொள்ள முடியவில்லையென்று...
இறைவன் கொடுத்த வரம்
மூவரும் எனக்காக...