Monday, August 24, 2009

என்ன தருவாய்

உதடுகளை கேட்டதற்கு
முத்தத்தை தருகிறாய்
அன்பை கேட்டதற்கு
காதலை தருகிறாய்
இதயத்தை கேட்டதற்கு
உன்னை தருகிறாய்
வெட்கத்தை கேட்டால்
என்ன தருவாய்....


Thursday, August 20, 2009

மீண்டும்

இந்த பிரபஞ்சத்தில்
நான் மீண்டும் மீண்டும்
உயிர்த்து எழுவேன்
உன் காதலை
வெற்றி கொள்ளும் வரை....


Monday, August 17, 2009

பிடித்தவை

இருள் தனிமை
நிசப்தம்....
எனக்கு மிகவும்
பிடித்தவை....
உன் நினைவுகள் மட்டும்
அங்கு அரங்கேறுவதால்....


நிழல்

உன் நிழலோடு
யூத்தமிடுகிறேன்....
உன் நிழலாய் உன்னோடு
நான் வருவதற்கு....



மௌனம்

செவிடாய் ஊமையாய்
பிறந்திருக்கலாம்
உன் மௌன மொழியை
புரிந்துகொள்வதற்கு....


Thursday, August 13, 2009

இதயம்

உன்னை சந்தித்தது
சில நொடிகள் ஆயினும்....
உன்னையே சிந்தித்தது
அக்கணம் முதல்
என் இதயம்....
அழகின் திகைப்பா....
காதலின் தேடலா....


Tuesday, August 11, 2009

பூக்கள்


எல்லா பூக்களும்
காலையில் பூத்து
மாலையில் வாடுகின்றன
உன்னைத்தவிர....


ஒருமுறை


எல்லார் வாழ்விலும்
ஜனனம் ஒருமுறை
மரணம் ஒருமுறை
இதனிடையில் காதல் ஒருமுறை....

ஜனனம் காதல் மரணம்
இவை மட்டுமே
என்வாழ்வாகிப்போனது....


மனிதனாக


இந்த பூமியில்
குழந்தையாய் ஜனித்து...
மகனாய் மகளாய்
தந்தையாய் தாயாய்
தாத்தாவாய் பாட்டியாய்
பல பரிமாணங்களில்
வாழ்கிறோம்...
மனிதனாகவும்
வாழ்ந்திடுங்கள்....


கண்ணீர்

உன் நினைவுகள்
என்னில் கலந்து
கண்ணீராய் வழிகிறது...
நீ என்னை பிரிந்து
சென்றதும்....



Friday, August 7, 2009

உன் முகம்

விண்ணுக்கும் எனக்கும்
நெருக்கம் அதிகம்....
ஏனன்றால் இரவில்
நான் நிலவோடும்
நட்சத்திரங்களோடும்
பேசும் நாட்கள் அதிகம்
அவற்றில் உன் முகம்
தெரிவதால்....


Wednesday, August 5, 2009

கல்யாணம்

இடி மேளமாய் முழங்க....
மின்னல் வான
வேடிக்கையாக....
வானவில் தோரணமாக....
மழை அட்சதையாக....
விண்ணுக்கும் மண்ணுக்கும்
கல்யாணம்....


உறவு

தாய்
தொப்புள்கொடி உறவு....
உடன்பிறப்பு
ரத்த உறவு....
மனைவி
தாலிக்கொடி உறவு....
நண்பன்
உயிரின் உறவு....


வென்றிருப்பேன்

நான் உனக்காக
காத்திருந்த பொழுதுகளில்....
நீ என்னோடு
வாழ்ந்திருந்தால் போதும்....
இந்த பிரபஞ்சத்தையே
வென்றிருப்பேன்....


மனிதாகிறேன்

தாயின் அரவணைப்பு....
தந்தையின் பாசம்....
மனைவியின் அன்பு....
குழந்தையின் சிரிப்பு....
நண்பனின் நட்பு....
இவற்றை துறந்து
முனிவனாக வேண்டாம்....
நான் முதலில்
மனிதனாகிறேன்....



Monday, August 3, 2009

நண்பர்கள் தினம்


பல்வேறு தினங்கள்
கொண்டாடினாலும்....
உலகம் முழுதும்
வயது மொழி
வேறுபாடின்றி....
கொண்டாடுகிறோம்
நண்பர்கள் தினம்....
நட்பு உணர்வுகளால்
உருவாகிறது....
உறவாலும் காதலாலும் அல்ல....


Sunday, August 2, 2009

தாய் மாமன்

இறைவன் படைப்பில்....
தாயின் மற்றொரு
பரிமானம்....
தாய் மாமன்....

நிலா பெண்ணே


லட்சம்பேர் நடுவிலும்
நீ மட்டுமே
பிரகாசமாய் தெரிகிறாய்....
நீ நிலா பெண்ணா....
ஏனென்றால் இருளிலும்
நிலா மட்டுமே
பிரகாசமாய் தெரியும்....

பதில் தெரியவில்லை

மகள் கேட்டாள்....
ஊனமுற்றவர்களும்
மனவளர்ச்சி குன்றியவர்களும்....
ஏன் பிறக்கிறார்கள் என்று....
பதில் தெரியாமல்
இறைவனிடம் கேட்க
வேண்டும் என்றேன்....

யார் என்பது உன்னை....

அறிவுரையில் ஆசானாய்....
கண்டிப்பில் தாயாய்....
பாசத்தில் மகளாய்....
பகிர்ந்துகொள்வதில் தோழியாய்....
இருக்கும் உன்னை
மகள் என்பதா....
இல்லை யார் என்பது....

அன்பு மனைவிக்கு


பிறந்த வீட்டை விட்டு....
என் சுக துக்கங்களை
உன்னுடையதாக்கி....
நானே உலகமாய்....
வாழும் உன்னை....
என்னுள் பாதியாய்....
அர்த்தனரீஸ்வரராய்
பார்க்கிறேன்....

Saturday, August 1, 2009

அன்பு தாத்தா


அன்று உங்கள்
கை பிடித்து
நடந்த நான்....
இன்று என்
கை பிடித்து
நடத்தி செல்கிறேன்
உங்களை....
இன்னும் பல
ஆண்டுகள் இது போல
நடந்துவிட
ஆசை தாத்தா....


தேர்தல் வந்தாச்சு

தேர்தல் வந்தாச்சு...
சோம்பேறி பாமரனுக்கு
சந்தோசம்...
இலவசங்கள்
எராளம் கிடைக்கும்...
சம்பாதிக்கும்
அனைத்தையும்
குடிக்கலாம் இனி....
மகன் கேட்ட
பள்ளி படிப்பை
அடுத்த தேர்தலில்
இலவச பாடத்திட்டம்
வரும் சேரலாம்
என்றான்....


நிலா சோறு


அன்று அம்மா
இன்று மகள்....
இருவர் ஊட்டிய
நிலா சோறும்
ருசித்தது எனக்கு....
ஒரே வித்யாசம்
அம்மா மடியில் நான்
என் மடியில் மகள்....


உரிமை

இரவுக்குப்பின் வரும்
வெளிச்சத்தை போல....
உன் பெயருக்குப்பின்
என் பெயரை எழுதும்
உரிமையை கொடு....