Monday, March 21, 2011

கவிதை


எழுத நினைத்த
கவிதைக்கு
வரிகள்
கிடைக்கவில்லை
...
கண்மூடி
அமர்ந்த
என்னுள்
கவிதையாய்
நீ....


காதல்


முகம் பார்த்து
மனம்
பார்த்து
புகைப்படம்
பார்த்து
குரல்
கேட்டு
வருவது
காதல் ...
உன்
நிழல் மட்டுமே
பார்த்து
வந்தது
என்
காதல்....


திருவிழா


திருவிழா வந்ததோர்
உணர்வு

தேர்தல்
வந்ததும்
தனது
ஓட்டுக்கு
கிடைக்கும்
பணத்திற்காக
இவன்
குடிமகன்....


Monday, March 14, 2011

ஜப்பான் மக்கள்...


பூகம்பத்தால் நாங்கள்
அழிந்து
விடவுமில்லை...
சுனாமியால்
நாங்கள்
கரைந்து
விடவுமில்லை...
வெகுண்டு
எழுவோம்
நாங்கள்
மீண்டும்
எங்கள்
தேசத்திற்காக...


குழந்தை


நீ கருவாய் உருவான
நாள்
முதல்
உன்
முகம் காண
ஏக்கத்தோடு
காத்திருந்தேன்...
தேவதையாய்
பிறந்த நீ
இன்று
என் மடியில்
என்னை
கண்ட
புன்சிரிப்போடு
....


Thursday, March 10, 2011

காதல்

கடிதம் கொடுத்து
காதலை சொல்ல
காத்திருந்தேன் உன்னிடம்...
பத்திரிகை கொடுத்து
திருமணத்திற்கு
அழைத்தாய் என்னிடம்...
காதலை சொல்ல
நினைத்தேன் நான்...
நட்பென்று புரிய
வைத்தாய் நீ...