Thursday, December 30, 2010

மனிதப்பிறவி


மனிதப்பிறவி
பிறப்பும் இறப்பும்...
இதனிடையில் வாழும்
காலத்தில் நம்மிடையே...

தீண்டாமை பகைமை
பழிஉணர்ச்சி...
படிப்பு வேலை...
நட்பு காதல் திருமணம்...
பாசம் வேஷம்
போட்டி பொறாமை...
உணர்ச்சிகள் மிகுந்ததொரு
நம் மனித வாழ்க்கை...

சுதந்திர நாட்டில்
காதலிக்க இன்னும்
சுதந்திரமில்லை
ஜாதி மத
வேறுபாடுகளால்...

வரதட்சணை கொடுமை...
லஞ்சம் ஊழல்
தலை விரித்தாடுகின்றன
சுதந்திர நாட்டில்...

மீண்டும் ஒரு
பாரதியும் பெரியாரும்
காந்தியும்
பிறந்திட வேண்டும்
நம் சுதந்திர நாட்டின்
சுதந்திரம் காத்திடவும்
மனித வாழ்க்கையை
சீர்திருத்தவும்....


Wednesday, December 29, 2010

புத்தாண்டு


வீதியின் ஓரத்தில்
ஒருகழித்து
கிடக்கிறாள்
வயோதிக
மூதாட்டி
உண்ண
உணவில்லாமல்
வசிக்க
வீடில்லாமல்...
பணத்தை
இறைத்து
புத்தாண்டு
விழாகொண்டாடி
வீதியங்கும்
வாழ்த்துக்கூறி
வாகனங்களில்
பறக்கிறார்கள்
இரக்கமற்ற பலர்....



Tuesday, December 28, 2010

ஜென்மம்


அவளை நேசிக்க
ஒரு ஜென்மம்...
அவளோடு வாழ்ந்திட
இன்னுமொரு ஜென்மம்...
நொடிப்பொழுதும்
அவளை பிரியாத
அந்த இரு ஜென்மம்...
இந்த வரம் மூன்று
கொடு இறைவனே...


முதியோர் இல்லம்


பத்து மாதம்
தனது கருப்பையில்
சுமந்து பெற்றடுத்த
தாயின் முதிர்வு காலத்தில்...
பல லட்சத்தில் மகன்
கட்டிய வீட்டில்
வசிக்க ஒரு இடமில்லை...


பாசம்


என்னை பெற்றவளும்
கட்டியவளும்
நான் பெற்றடுதவளும்
என்னை கடிந்து கொண்டனர்...
என் ஒருவனால் அவர்களிடம்
பாசத்தை பகிர்ந்து
கொள்ள முடியவில்லையென்று...
இறைவன் கொடுத்த வரம்
மூவரும் எனக்காக...


Thursday, December 23, 2010

மீண்டும் அந்த நாட்கள்


மீண்டும் அந்த
நாட்கள் வாராதா....
அம்மாவின் கரம் பிடித்து
பள்ளிக்கு சென்ற நாட்கள்....
தந்தையோடு சென்று
பண்டிகைக்கு புது துணி
எடுத்த நாட்கள்....
தங்கையோடு தீபாவளி
பட்டாசு வெடித்த நாட்கள்....
பள்ளி நண்பர்களோடு
கபடி விளையாடிய நாட்கள்....
கல்லூரி நண்பர்களோடு
திரைப்படம் பார்த்த நாட்கள்....
இவையாவும் மீண்டும் வர
நான் சிறுவனாய் மாறிவிட
வரம் ஒன்று கொடு இறைவனே....


வலி

மகளை ஈன்றெடுத்த
வலியை விட....
திருமணத்திற்குபின் பிரியும்
வலியை விட....
பள்ளி சென்ற மகளின்
பத்திரமான வருகைக்காக
காத்திருக்கும் வலி அதிகம்....


வருங்காலம்

அன்று என் தந்தை
கவலைப்பட
என் வருங்காலம் பற்றிய
கவலையின்றி திரிந்தேன்....
இன்று நான் தந்தையாய்
என் வருங்காலக்
கவலையோடும்
கனவுகளோடும்
அலைகிறேன்....


Saturday, December 18, 2010

சுவை


சுவையாய் உண்ணும் எனக்கு
உப்பில்லாத உணவும்
மிகவும் சுவைத்தது
இன்று...
ஊட்டியவள்
என் மகள் என்பதால்....