Thursday, December 30, 2010

மனிதப்பிறவி


மனிதப்பிறவி
பிறப்பும் இறப்பும்...
இதனிடையில் வாழும்
காலத்தில் நம்மிடையே...

தீண்டாமை பகைமை
பழிஉணர்ச்சி...
படிப்பு வேலை...
நட்பு காதல் திருமணம்...
பாசம் வேஷம்
போட்டி பொறாமை...
உணர்ச்சிகள் மிகுந்ததொரு
நம் மனித வாழ்க்கை...

சுதந்திர நாட்டில்
காதலிக்க இன்னும்
சுதந்திரமில்லை
ஜாதி மத
வேறுபாடுகளால்...

வரதட்சணை கொடுமை...
லஞ்சம் ஊழல்
தலை விரித்தாடுகின்றன
சுதந்திர நாட்டில்...

மீண்டும் ஒரு
பாரதியும் பெரியாரும்
காந்தியும்
பிறந்திட வேண்டும்
நம் சுதந்திர நாட்டின்
சுதந்திரம் காத்திடவும்
மனித வாழ்க்கையை
சீர்திருத்தவும்....


No comments:

Post a Comment