Wednesday, July 8, 2015

தனிமை




உன்னோடு நான் இருக்கும்
தருணங்கள் எனக்கு இனிமை...
நீ என்னோடு இல்லாத தருணங்கள்
எனக்கு வெறுமை...

உன்னோடு பேசிக்கொண்டிருந்தால்
என்றும் புதுமை...
நீ இல்லாமல் பேசிக்கொண்டிருந்தால்
என்றும் தனிமை...
என்னோடு நீ இருந்தால்
தொலை தூரமும்
பக்கமாய் உணர்கிறேன்...
நீ என்னோடு
இல்லாதிருந்தால் பக்கமும்
தொலை தூரமாய் அறிகிறேன்...
நீ என்னோடு இருக்கும்பொழுது
நம் குடும்பத்தை ஒன்றாக
இணைக்கிறாய்...
என்னோடு நீ இல்லாதபொழுது
நம் குடும்பத்தை
என்னை விட்டு பிரிக்கிறாய்...
இப்படிக்கு கைபேசி பற்றி நான்....

No comments:

Post a Comment