Saturday, May 5, 2012

தாத்தா

எங்களின் ஒவ்வொருவர் வருகைக்கும்
நீங்கள் காத்திருப்பீர்கள்
சாய்வு நாற்காலியில்
உட்கார்ந்து கொண்டு...

இந்த வருகைக்கும்
காத்திருந்தீர்கள்
புகைபடமாய்...

உங்கள் உருவம் இருந்தது
ஒலி மட்டும் இல்லை...

இனி உங்கள் உருவம்
மட்டும் காத்திருக்கும்
புகைபடமாய்
எங்களின்
வருகைக்காக என்றும்...

No comments:

Post a Comment