skip to main |
skip to sidebar
மனிதப்பிறவி
பிறப்பும் இறப்பும்...
இதனிடையில் வாழும்
காலத்தில் நம்மிடையே...
தீண்டாமை பகைமை
பழிஉணர்ச்சி...
படிப்பு வேலை...
நட்பு காதல் திருமணம்...
பாசம் வேஷம்
போட்டி பொறாமை...
உணர்ச்சிகள் மிகுந்ததொரு
நம் மனித வாழ்க்கை...
சுதந்திர நாட்டில்
காதலிக்க இன்னும்
சுதந்திரமில்லை
ஜாதி மத
வேறுபாடுகளால்...
வரதட்சணை கொடுமை...
லஞ்சம் ஊழல்
தலை விரித்தாடுகின்றன
சுதந்திர நாட்டில்...
மீண்டும் ஒரு
பாரதியும் பெரியாரும்
காந்தியும்
பிறந்திட வேண்டும்
நம் சுதந்திர நாட்டின்
சுதந்திரம் காத்திடவும்
மனித வாழ்க்கையை
சீர்திருத்தவும்....
வீதியின் ஓரத்தில்
ஒருகழித்து கிடக்கிறாள்
வயோதிக மூதாட்டி
உண்ண உணவில்லாமல்
வசிக்க வீடில்லாமல்...
பணத்தை இறைத்து
புத்தாண்டு விழாகொண்டாடி
வீதியங்கும் வாழ்த்துக்கூறி
வாகனங்களில் பறக்கிறார்கள்
இரக்கமற்ற பலர்....
அவளை நேசிக்க
ஒரு ஜென்மம்...
அவளோடு வாழ்ந்திட
இன்னுமொரு ஜென்மம்...
நொடிப்பொழுதும்
அவளை பிரியாத
அந்த இரு ஜென்மம்...
இந்த வரம் மூன்று
கொடு இறைவனே...
பத்து மாதம்
தனது கருப்பையில்
சுமந்து பெற்றடுத்த
தாயின் முதிர்வு காலத்தில்...
பல லட்சத்தில் மகன்
கட்டிய வீட்டில்
வசிக்க ஒரு இடமில்லை...
என்னை பெற்றவளும்
கட்டியவளும்
நான் பெற்றடுதவளும்
என்னை கடிந்து கொண்டனர்...
என் ஒருவனால் அவர்களிடம்
பாசத்தை பகிர்ந்து
கொள்ள முடியவில்லையென்று...
இறைவன் கொடுத்த வரம்
மூவரும் எனக்காக...
மீண்டும் அந்த
நாட்கள் வாராதா....
அம்மாவின் கரம் பிடித்து
பள்ளிக்கு சென்ற நாட்கள்....
தந்தையோடு சென்று
பண்டிகைக்கு புது துணி
எடுத்த நாட்கள்....
தங்கையோடு தீபாவளி
பட்டாசு வெடித்த நாட்கள்....
பள்ளி நண்பர்களோடு
கபடி விளையாடிய நாட்கள்....
கல்லூரி நண்பர்களோடு
திரைப்படம் பார்த்த நாட்கள்....
இவையாவும் மீண்டும் வர
நான் சிறுவனாய் மாறிவிட
வரம் ஒன்று கொடு இறைவனே....
மகளை ஈன்றெடுத்த
வலியை விட....
திருமணத்திற்குபின் பிரியும்
வலியை விட....
பள்ளி சென்ற மகளின்
பத்திரமான வருகைக்காக
காத்திருக்கும் வலி அதிகம்....
அன்று என் தந்தை
கவலைப்பட
என் வருங்காலம் பற்றிய
கவலையின்றி திரிந்தேன்....
இன்று நான் தந்தையாய்
என் வருங்காலக்
கவலையோடும்
கனவுகளோடும்
அலைகிறேன்....
சுவையாய் உண்ணும் எனக்கு
உப்பில்லாத உணவும்
மிகவும் சுவைத்தது
இன்று...
ஊட்டியவள்
என் மகள் என்பதால்....
எங்கு தேடியும்
கிடைக்கவில்லை...
யாரிடம் கேட்டும்
பிரயோஜனமில்லை...
நேற்று சந்தித்த அவள்
மீது சந்தேகமுண்டு...
களவாண்டு விட்டாள்
என் இதயத்தை என்று...
எங்கு புகார் செய்வேன்
இந்த காதல் திருட்டை...
தருவாளா பதிலாக
அவள் இதயத்தை என்று....
பூமித் தாயின்
உஷ்ணத்தை குளிர்விக்க
மேக மகளின்
அழுகை
மழை....
கரு நீல வானில்
மின்னும்
நட்ஷத்ரிகங்களிடையே
அழகு வெள்ளை நிலா...
மறைந்த நிலவின்
சூரிய ஒளியில்
அழகு வெள்ளை வானம்...
இயற்கையின் விசித்திரங்கள்
இன்னும் பல....
ஆறறிவு படைத்த
மனிதனிடம்
ஜாதி மதங்கள் உண்டு
பொறாமை மொழிவெறிகள் உண்டு...
ஐந்து அறிவு
படைத்த விலங்கிடம்
பாகுபாடுகள் இல்லை...
மனிதனும்
ஐந்து அறிவு கொண்ட
மனித விலங்காகவே
படைக்கபட்டிருக்கலாம்....
கனவுகள்
நாளைய நிஜங்கள்....
பொய்கள்
நாளைய உண்மைகள்....
விதைகள்
நாளைய மரங்கள்....
காதலர்கள்
நாளைய தம்பதிகள்....
நண்பர்கள்
நாளையும் நண்பர்கள்....
நான் இறந்தப்பின்
என் கண்களை
உன்னோடு வைத்துக்கொள்
உன்னை நான்
எப்பொழுதும்
பார்க்கவேண்டும் என்பதால்....
என் இதயத்தை
மட்டும் எரித்து
விடாதே அதில்
நீ இருப்பதால்....
இறந்தால் மட்டும்
தான் உறுப்பு
தானமா....
நான் இப்பொழுதே
தானம்
செய்துவிட்டேன்
உன்னிடம்
என் இதயத்தை....
என் இதயம்
ஒரு கண்ணாடி
அதில் உன் உருவம்
பிரதிபலிப்பதால்....
அதை உடைப்பதும்
பாதுகாப்பதும்
உன்னிடமே உள்ளது....
மௌனம்
சம்மதம்
என்றார்கள்....
இல்லை....
உன் மௌனம்
என் நரகம்....
உருவங்கள் மாறலாம்...
ஆசைகள் மாறலாம்...
ஆனால் நம்
இலட்சியங்களும்
சிந்தனைகளும்
ஒன்றுதான்...
நம் நண்பர்கள்
என்பதால்...
வீதியெங்கும்
வீட்டு வாசலெங்கும்
காகித குப்பை....
பிள்ளையின் அழுகைக்கு
மீண்டும் பட்டாசு
வாங்கினான் ஆயிரம்
ரூபாயை கரியாக்க....
வழிமறித்த
ஏழை சிறுவனின்
பசிக்கு பணமில்லை என்றான்....
இவனின்
சந்தோஷம்
இவன் குடும்பத்தின்
சோகம்....
புகை பிடித்து
மது குடித்து
மடிபவன்....
காத்திருந்தேன்
விடிந்த பின்பும்
வரவில்லை
என் கனவில் நீ....
மீண்டும்
காத்திருப்பேன்
என் கனவு
தேவதை உனக்காக....
கவிதை போட்டியிலும்
ஓவிய போட்டியிலும்
முதல் பரிசு
தந்தார்கள்....
என் கவிதையும்
ஓவியமும்
உன் பெயர் தான்....
ஜனனம் மரணம்
இறைவன் கொடுப்பது....
இதனிடையில் இருக்கும்
வாழ்க்கை மனிதன்
நிர்ணயிப்பது....
இதில் சந்தோஷம்
நிம்மதியும் போதும்....
விரோதம் பொறாமையும்
வேண்டாம்....
அம்மா என்ற
சொல்லின்
அற்புதம்
புரிந்தது
என் மகள்
என்னை
அம்மா என்று
அழைத்தபோது....
எங்கள்
தேச பிதாவை
என்றும் மறந்ததில்லை
நாங்கள்...
அவர் படம்
பதித்த ருபாய்
நோட்டை வாங்காமல்
எந்த பணியும்
முடிக்க மாட்டோம்
நாங்கள்....
வரமொன்று
கேட்டேன்
இறைவனிடம்...
கொடுத்தான்
என் மகளாக....
வீட்டிற்க்கு ஒரு
மரம்
வளர்க்காவிட்டாலும்
வீதிக்கு ஒரு
மரமாவது
விட்டுவைப்போம்....
நினைப்பதும்...
நகைப்பதும்...
அடிகடி முகம்
பார்ப்பதும்...
தனிமையில் உரையாடி
கொள்வதும்...
இவை காதலுக்கும்
பித்துக்கும்
அறிகுறிகலாம்....
தேர்வு வினாத்தாளில்
கேள்விகள் நூறு
இருந்தும் எனக்கு
விடை ஒன்றுதான்
"தெரியவில்லை"....
செய்திதாள்கள் அனைத்தும்
கையில் இருந்தும்
படிக்க நேரமில்லை...
விடிவதற்க்குள்
அனைத்து வீட்டிலும்
விநியோகம் செய்துவிட்டு
கல்லூரிக்கு செல்ல
வேண்டும் என்பதால்....
என் சிறுவயது
மழலை பேச்சுக்கள்
குறும்புகள்
சண்டைகள்
அழுகைகள்
பிடிவாதங்கள்
நேரில் பார்க்கும் உணர்வு....
என் பிரதிபலிப்பில்
என் மகள்....
இரவின் வெளிச்சம்
நிலவு....
நிலவின் வெளிச்சம்
நீ....
இரவு பகல்
வானம் பூமி
நெருப்பு நீர்
நிலவு சூரியன்
வெய்யில் மழை
நான் நீ
எல்லாமே
எதிரும் புதிரும்....
எதிர்கால கனவுகளோடு
கல்லூரியில் சேர
காலடி எடுத்து வைத்தான்
பள்ளியின் முதல் மாணவன்...
சில லட்சங்களை
மட்டும் கேட்டது
அவன் இலட்சியங்களை வெல்ல
அந்த கல்லூரி நிர்வாகம்...
ஏழ்மை இவனின் சாபமா...
இவன் எதிர்கால
இந்தியா என்றார்கள்...
வாழ்க பாரதம்...
வாழ்க ஜனநாயகம்....
வெய்யில் உக்கிரத்தின்
தாகத்தை தணிக்க...
வீதியில் விற்றுகொண்டிருந்த
இளநீர் ஒன்றை குடித்தேன்...
சுட்டரிக்கும் வெய்யிலில்
கால்கடுக்க நின்று
வெட்டிக்கொடுத்தவன்
தாகத்தை தணிக்க...
பானையில் இருந்த
தண்ணீரை குடித்தான்....
மலர்களை இறைவன்
படைக்கும் முன்
நீ பிறந்திருந்தால்...
வேறு மலர்களை
படைதிருக்கமாட்டான்...
எவரெஸ்ட் சிகரத்தை
எட்ட முடிந்த எனக்கு...
உன் மனதை எட்ட
முடியவில்லை....
கனவுகள்
எனக்கு மிகவும்
பிடித்தவை...
அதில் மட்டுமே
நீயும் நானும்
சேர்ந்திருப்பதால்....
விடிந்தபின்பும்
கண் விழிக்க
மனமில்லாமல்
உறங்கி கிடந்தேன்....
கனவில் வந்த நீ
இன்னும் செல்லாததால்....
ஆயிரம் எதிர்கால
கனவுகளோடும்
கடமைகளோடும்
பறந்தார்கள்....
அனைவரையும் சோகத்தில்
ஆழ்த்தி உயிரை
மாய்த்தார்கள்....
குழந்தைகளும் விதிவிலக்கல்ல...
இரக்கமற்ற அந்த
நொடிப்பொழுது நடந்த
விமான விபத்தில்....
இனி ஒருக்கணமும்
இரக்கமற்றவனாக வேண்டாம்
இறைவனே....
என் நினைவு பதிவேட்டில்
நித்தமும் நூறு தடவை
உன் வருகையை
பதிவு செய்கிறாய்....
ஊதியமாய் என்னை
தருகிறேன் என்றால்
வேண்டாம் என்று
மறுக்கிறாய்....
அடிவாங்கி அழுத
குழந்தை....
உன் கை வலிக்கிறதா
அம்மா என்றது....
அவள் நிழலாய்
இருக்க ஆசையுண்டு....
அவள் வெட்கத்தால்
தலைகுனியும்
அழகை ரசிப்பதற்க்காக.....
அவள் கையின்
ஸ்பரிசம்பட்டவுடன்
பரவசப்பட்டு
சலனமற்று கிடந்தன
அவள் இட்ட கோலம்.....
வேர்வை சிந்தி
அப்பாவின் உழைப்பில்
மகளின் உயர் கல்வி....
திருமணத்துக்குப்பின்
மனைவி அந்தஸ்தில்....
அடுபங்கரையில்
வேர்வை சிந்தி
வீணாய் போனது.....
மரணம்
என்னை வேண்டுமானால்
வெல்லலாம்....
என்னுள் புதைந்து
கிடக்கும்
உன் நினைவுகளை அல்ல.....
உன் மௌனம்
என் மரணத்தின்
நுழை வாயில்....
என் கல்லறையில்
உன் கண்ணீராவது
என்னோடு பேசட்டும்....