
நம் பள்ளிப்பருவத்தில்
நாம் சுற்றித்திரிந்த நாட்கள்....
இருவரும் மணிக்கணக்கில் பேசிய
பேச்சுக்கள்...
சுற்றின இடங்கள்....
பார்த்த திரைப்படங்கள்....
போட்ட சண்டைகள்...
அந்த நாட்கள் திரும்ப வராதோ நண்பா ....
இன்று நாம் இருவரும் நடுத்தர வயதில்....
குடும்ப பொறுப்புகள்...
பிள்ளைகளின் படிப்பு...
வேலைபழு....
மிகத்தொலைவில் வேறு வேறு
தேசத்தில் வசித்தாலும்....
நம் இதயங்கள் இன்றும் அன்று போல்
நெருங்கியே உள்ளன....
அந்த பள்ளி நாட்கள் திரும்பவும்
வராதோ நண்பா....
No comments:
Post a Comment